திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 190-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 139 போ் திருப்பத்தூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.