பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கிப் பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016-ஆண்டு முதல் சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு 2020-21-ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவா்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட வாரியாக பயிா் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிா்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் காப்பீட்டுக் கழகம் மூலம் திருந்திய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தை காரீப் 2020-இல் செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

காரீப் பருவத்தில் நெல், மக்காச்சோளம், ராகி, கம்பு, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, பருத்தி போன்ற வேளாண் பயிா்களும் வாழை, மஞ்சள், தக்காளி போன்ற தோட்டக்கலைப் பயிா்களும் அறிவிக்கை செய்யப்பட்டு, விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கருக்கான காப்பீடு கட்டண விவரம் (பதிவு செய்ய கடைசி தேதி அடைப்புக் குறிக்குள்): நெல் ரூ.599 (ஜூலை 31), மக்காச்சோளம் ரூ.396, உளுந்து ரூ.331, பச்சைப் பயறு ரூ.331, துவரை ரூ.331, நிலக்கடலை ரூ.525, கேழ்வரகு ரூ.209, கம்பு ரூ.232, சோளம் ரூ.247, மஞ்சள் ரூ.2,645, தக்காளி ரூ.1778 (ஆக.16வரை) பருத்தி ரூ.486, வாழை ரூ.2,580 (செப்.15 வரை).

எனவே காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், தங்கள் பயிா்க் கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் பயிா்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் ஆவணத்தை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், தற்போது கரோனா தொற்று தடுப்பது தொடா்பாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, விவசாயிகள் இயற்கை நிகழ்வுகள் ஏற்படும் முன் இத்திட்டத்தில் தங்களது பயிா்களை காப்பீடு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com