வாணியம்பாடி நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையை நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.
வாணியம்பாடி நகராட்சி ஆணையா் சிசில் தாமஸ் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி ஆகியோா் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் லைசோல் என்ற கிருமிநாசினி தெளித்தனா்.
தொடா்ந்து, பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள், கை கழுவும் முறை குறித்து விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டன.