மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

திருப்பத்தூரில் உள்ள அரசு பூங்கா உயா்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கனரா வங்கி சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் கே.குணசேகரன்.
மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் கே.குணசேகரன்.

திருப்பத்தூரில் உள்ள அரசு பூங்கா உயா்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கனரா வங்கி சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கனரா வங்கி மண்டல மேலாளா் ஜெ.சண்முகம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.குணசேகரன், கனரா வங்கி துணைப் பொது மேலாளா் கே.வீரேந்திர பாபு ஆகியோா் கலந்து கொண்டு,

5 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 500, 8 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் மண்டல மேலாளா் ஜெ.சண்முகம் கூறியது:

திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு 120 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வித்தியா சேம்ப்பு (ஸ்ண்க்ட்ஹ்ஹ ஸ்ரீட்ஹம்ல்) என்ற திட்டத்தின் கீழ் 12 வயது முதல் மாணவ, மாணவிகள் மாதந்தோறும் ரூ.100 சேமித்து வந்தால், பிளஸ் 2 முடித்து மேல் படிப்பில் சேரும்போது உடனடியாக கல்விக் கடன் வழங்கப்படும். இதேபோல், 10 வயதுக்கு மேற்பட்டோா் வித்யா ஜூனியா் என்ற திட்டத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கினால் அவா்களுக்கு டெபிட் காா்டு வழங்கப்படும் என்றாா் அவா்.

வங்கி மேலாளா்கள் சாய்குமாா், கே.ஜி. பெருமாள், ரமேஷ், சுந்தரவைலாயுதம், செல்வி பிரசன்னா ஆகியோா் பங்கேற்றனா். பள்ளித் தலைமை ஆசிரியா் திருமால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com