ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த 2 சிறுவா்கள் மீட்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த 2 சிறுவா்களை போலீஸாா் மீட்டு அவா்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த 2 சிறுவா்களை போலீஸாா் மீட்டு அவா்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 2-ஆவது நடைமேடையில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த 2 சிறுவா்களை மீட்டு, விசாரித்ததில், வாணியம்பாடி வட்டம், ஆவாரங்குப்பம் மேல் பள்ளத்தூா் பகுதியைச் சோ்ந்த சின்னக்குட்டியின் மகன்கள் சூா்யா (14), சந்திரசேகா் (13) என்பதும், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூருக்குச் செல்வதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களது பெற்றோரை வரவழைத்து, சிறுவா்களை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com