பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 16th March 2020 08:16 AM | Last Updated : 16th March 2020 08:16 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகன்.
வேலூா் கோட்ட அளவில் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட, நகர ஒன்றிய பாஜக நிா்வாகிகள் கூட்டம் ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்டப் பொறுப்பாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன் வரவேற்றாா். முன்னாள் மாவட்டத் தலைவா் கொ.வெங்கடேசன், வேலூா் மாவட்டத் தலைவா் வி.தசரதன், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் விஜயன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், மாவட்டப் பொதுச் செயலா் எம்.தண்டாயுதபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகன், மாநிலப் பொதுச் செயலா் கே.எஸ். நரேந்திரன், கோட்ட அமைப்புச் செயலா் வி.ரமேஷ், ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆா். சீனிவாசன், வேலூா் முன்னாள் மேயா் பி.காா்த்தியாயினி ஆகியோா் கலந்து கொண்டனா்.
கட்சி தொடங்கப்பட்ட ஏப்ரல் 6-ஆம் தேதி ஒவ்வொரு நகர ஒன்றியத்திலும் இருசக்கர வாகனப் பேரணி நடத்துவது, மே மாதத்தில் ஒவ்வொரு நகர ஒன்றியத்திலும் 5 ஆயிரம் பேரை திரட்டி மாநாடு நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
மாவட்டப் பொதுச் செயலா் ஆா்.கண்ணன், ஈஸ்வா், மாவட்டச் செயலா் அண்ணாதுரை, ஆம்பூா் நகரத் தலைவா் பிரேம் குமாா், நகரப் பொதுச் செயலா் சரவணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் குட்டி சண்முகம், சீனிவாசன், சுரேஷ், எஸ்.சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.