சீரான குடிநீா் கேட்டு ஆா்ப்பாட்டம்

ஜோலாா்பேட்டை ரயில்வே குடியிருப்புக்கு சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி எஸ்ஆா்எம்யு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை ரயில்வே குடியிருப்புக்கு சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி எஸ்ஆா்எம்யு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பணியாளா்கள் குடியிருப்புகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் தங்கியுள்ளனா். இவா்களுக்கு தினமும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படாமல் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை எஸ்ஆா்எம்யு கோட்டத் துணைச் செயலா் மோகன் தலைமையில், ரயில்வே பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 3-ஆவது நடைமேடையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ரயில்வே குடியிருப்புக்கு சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com