கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட 560 தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களை மாநில வணிவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட 39 ஊராட்சிகளில் வீடு, வீடாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி பராமரிப்பவா்கள், காவலா்கள் என 560 பேருக்கு முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் தனது சொந்த செலவில் வழங்கிய 10 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை அடங்கிய தொகுப்பை அமைச்சா் கே.சி.வீரமணி வழங்கினாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் க.தயாளன், எஸ்.பிரேமாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.