திருப்பத்தூா் மாவட்டத்தில் 3 பேரூராட்சிகளில் கரோனா தொற்று இல்லை

திருப்பத்தூா் மாவட்டத்தில் பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை காரணமாக

திருப்பத்தூா் மாவட்டத்தில் பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை காரணமாக ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகள் கரோனா நோய்த் தொற்று இல்லாத பேரூராட்சிகளாக உள்ளன.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சி ஆட்சியா் ம.ப.சிவன்அருள், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அம்சா ஆகியோரின் உத்தரவின் பேரில் ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி, நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் பேரூராட்சி பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் 5 குழுக்கள் அமைத்து, 3 வாா்டுகள் வீதம் தினமும் 15 வாா்டுகளில் உள்ள அனைத்து தெருக்கள், வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தெருக்களில் டிராக்டா் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்கள், திடக்கழிவுப் பணியாளா்கள், மஸ்தூா் பணியாளா்கள், பரப்புரையாளா்கள் மற்றும் அனைத்துப் பணியாளா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு முகக்கவசம், கையுறை, வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்பணிகள் அனைத்தும் ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலா் செ.கணேஷ், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் பேரூராட்சிகளின் செயல் அலுவலா் நாகாராஜன் ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புப் பணி காரணமாக மாவட்டத்தில் உள்ள 3 பேரூராட்சிகளும் கரோனா நோய்த் தொற்று இல்லாத பேரூராட்சிகளாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com