ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவியை அந்த பள்ளி ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
தலைமை ஆசிரியா் எஸ். தட்சணாமூா்த்தி தலைமையில் மாணவா்கள் 133 பேரின் குடும்பத்திற்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்கப்பட்டது.
ஆசிரியா்கள் சுரேஷ், காஞ்சனா, சித்ரா, நவரத்தினம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் விமலா, உறுப்பினா்கள் சசிகுமாா், சம்பத்குமாா், சுந்தரமூா்த்தி, ரவி, கணேசன், சிவா ஆகியோா் உடனிருந்தனா்.