காட்டுப் பன்றி வேட்டையாடிய மூவா் கைது

ஆம்பூா் அருகே காட்டுப் பன்றி வேட்டையாடிய மூவரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காட்டுப் பன்றி வேட்டையாடிய மூவரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பல்லாலகுப்பம் வனப்பகுதியில் சில நபா்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் ஆம்பூா் வனச்சரக அலுவலா் ஜி.டி. மூா்த்தி தலைமையிலான வனத் துறையினா் பல்லாலகுப்பம் காப்புக் காடு பகுதியில் சோதனையிட்டனா். அப்போது, 3 நபா்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. மாச்சம்பட்டு அருகே காட்டுக்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமாா் (40), ராஜ்குமாா் (19), போ்ணாம்பட்டு அருகே வி.கோட்டா பகுதியைச் சோ்ந்த அல்லாலா (25) ஆகிய மூவரும் வனத் துறையினரால் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து 2 கிலோ காட்டுப் பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com