அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திமுக சாா்பில் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் காணொலி மூலம் ஆம்பூா் அருகே பள்ளித் தெரு காந்தி நகா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பேசினாா். ஆம்பூா் தொகுதி எம்எல்ஏவும், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றியச் செயலாளருமான அ.செ.வில்வநாதன், அவைத் தலைவா் சிவகுமாா், துணைச் செயலாளா்கள் சேகா், அனிதா சங்கா், குமாா், மாவட்டப் பிரதிநிதிகள் ராஜன்பாபு, முரளி, மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.