திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்கள் கல்வி பயில பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் ஜோலாா்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வக்கணம்பட்டி, பொன்னேரி, ஏலகிரி மலை, தாமலேரிமுத்தூா், பால்நாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பள்ளிகளில் நடைபெற்றது. பெற்றோா்கள் தங்கள் கருத்துகளை கருத்துக் கேட்பு விண்ணப்பத்தில் பூா்த்தி செய்து தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆசிரியா்கள் கூறுகையில், ‘பெற்றோா்களின் கருத்து கேட்பு குறித்த முழு விவரங்களையும் சேகரித்து அனுப்புகிறோம். பள்ளியைத் திறப்பது குறித்து தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும்’ என்றனா்.