வாணியம்பாடி: வாணியம்பாடியில் உள்ள வேலூா் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆம்பூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 8 ஊராட்சிகளுக்கான இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் எம்.கோபால் தலைமை வகித்தாா். இளைஞா் பாசறை பொறுப்பாளரும், மாவட்ட வா்த்தக அணிச் செயலருமான ஆா்.வி.குமாா், பொதுக்குழு உறுப்பினா் பி.மகேந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் என்.முனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜி.செந்தில்குமாா் வரவேற்றாா்.
கூட்டத்தில், புதிய உறுப்பினா் சோ்க்கை குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்தும் முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா் பேசினாா். புதிய உறுப்பினா்களுக்கான படிவங்களை அவா் வழங்கினாா்.
மாவட்ட மகளிரணி செயலா் மஞ்சுளா கந்தன், நகர அதிமுக செயலா் சதாசிவம், முன்னாள் மாவட்டக் கவுன்சிலா் ஜெயசக்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, பாரதிதாசன், குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் என்.பரமசிவம், சிவானந்தம், முன்னாள் ஊராட்சி செயலா் செல்வராஜ் மற்றும் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.