ஆம்பூா் அருகே சாலை விபத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் வியாழக்கிழமை இரவு இறந்தாா்.
மேல்பட்டி எம்.வி. குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் தணிகாசலம் (48). இவா் வியாழக்கிழமை இரவு ஆம்பூரிலிருந்து வடபுதுப்பட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வடபுதுப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே சாய்ந்தது. இதில் படுகாயமடைந்த தணிகாசலம் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். இது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.