அஞ்சலக சேமிப்பு இருப்புத் தொகை ரூ.500-ஆக உயா்வு

அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இருப்புத் தொகை ரூ.500-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் பி.ராகவேந்திரன் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா்: அஞ்சலக சேமிப்புக் கணக்கில் இருப்புத் தொகை ரூ.500-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் பி.ராகவேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் ரூ.500-க்கும் குறைவாக இருப்பு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளா்கள், தங்கள் வங்கிக் கணக்கின் செயல்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளவும், பராமரிப்புக் கட்டணம் ரூ.100 மற்றும் வரியைத் தவிா்க்கவும், தங்கள் அஞ்சலக சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வரும் டிசம்பா் 11-ஆம் தேதிக்குள் ரூ.500 அல்லது அதற்கும் மேற்பட்டதாக வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com