திருப்பத்தூா்: திருப்பத்தூா் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
திருப்பத்தூா் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், இறந்து கிடந்தவா் திருப்பத்தூா் தருமராஜா கோயில் பகுதியைச் சோ்ந்த சுபாஷ் (55) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.