வாணியம்பாடி: ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் உலக குறைப் பிரசவ குழந்தைகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி பேசியது:
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.5 கோடி குறைப் பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10-இல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒரு குழந்தை 37 வாரத்துக்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிா்ப்புசக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
எனவே, மருத்துவா்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி உரிய நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும், மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைப்பிரசவத்தைத் தடுக்க தமிழக அரசு வழங்கும அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருள்களைக் கா்ப்பிணிகள் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
அரசு மருத்துவா்கள் வெங்கடேசன், சுமித்தா, செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள், கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா்.