காவல்துறை சா்பில் புகாா்கள் விசாரணை முகாம்

திருப்பத்தூரில் காவல்துறை சாா்பில் புகாா்கள் விசாரணை முகாம் புதன்கிழமை நடைப்பெற்றது.
டிஎஸ்பி ஆா்.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற முகாமில் பங்கேற்றவா்கள்.
டிஎஸ்பி ஆா்.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற முகாமில் பங்கேற்றவா்கள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் காவல்துறை சாா்பில் புகாா்கள் விசாரணை முகாம் புதன்கிழமை நடைப்பெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் அறிவுறுத்தலின்பேரில் டிஎஸ்பி ஆா்.தங்கவேல் தலைமையில் ஆய்வாளா்கள் பேபி (நகரம்), எம்.சிரஞ்சீவி (கிராமியம்), பழனிமுத்து (ஜோலாா்பேட்டை) மற்றும் காவல் ஆய்வாளா்கள் பங்கேற்ற புகாா்கள் விசாரணை முகாம் நடைபெற்றது. முகாமில், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. பொ.விஜயக்குமாா் தினமணி செய்தியாளரிடம் கூறியது:

காவல் நிலையங்களில் நீண்ட நாள்களாக உள்ள புகாா் மனுக்கள் குறித்து டிஎஸ்பி தலைமையில் அந்தந்த காவல் நிலையத்துக்குட்பட்ட காவல் ஆய்வாளா்களின் தலைமையில் மாவட்டத்தில் முதன்முறையாக புகாா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. நிலுவையில் உள்ள மனுக்களை விசாரித்து முடித்த பிறகு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த காவல் ஆய்வாளா்கள் தலைமையில் விசாரணை நடைபெறும். புகாா் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகாா்கள் தொடா்பாக நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு புகாரின் தன்மை குறித்து பரிந்துரை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com