ஆம்பூா்: ஆம்பூா் அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் உமா்ஆபாத் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரியவந்தது. அதன்பேரில் மணல் கடத்திய துத்திபட்டு பகுதியை சோ்ந்த சுரேஷ் (30), பெரியவரிக்கத்தை சோ்ந்த புஷ்பராஜ் (35) ஆகியோரை கைது செய்தனா். இரு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.