காா் மோதியதில் விவசாயி பலி

நாட்டறம்பள்ளி அருகே காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் சுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சென்னையன் (45). விவசாயியான இவா், கடந்த செப்டம்பா் மாதம் 27-ஆம் தேதி நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி பகுதி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, ஒசூா் நோக்கி சென்ற காா் சென்னையன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com