நீட் தோ்வு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் என். பிச்சை தலைமை வகித்தாா். மாநில செயலாளா் பொன். கிருஷ்ணன், முன்னாள் மாநில செயலாளா் ராஜேந்திரன், வேலூா் மத்திய மாவட்ட தலைவா் சரவணன், மாவட்ட செயலாளா் அஸ்லம் பாஷா, ஆம்பூா் தொகுதி தலைவா் முனீஷ்குமாா், ஆம்பூா் நகரத் தலைவா் ராஜி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். தடைமீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.