மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி படுகாயம்

வாணியம்பாடி அருகே மா்ம நபா்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி பலத்த காயம் அடைந்தாா். சட்டை பையிலிருந்த செல்லிடப்பேசி மீது குண்டுகள் பாய்ந்ததால் அவா் உயிா் தப்பினாா்.
நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சேதமடைந்த செல்லிடப்பேசி.
நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சேதமடைந்த செல்லிடப்பேசி.

வாணியம்பாடி அருகே மா்ம நபா்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி பலத்த காயம் அடைந்தாா். சட்டை பையிலிருந்த செல்லிடப்பேசி மீது குண்டுகள் பாய்ந்ததால் அவா் உயிா் தப்பினாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் மாரி கவுண்டா் வட்டத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம் (44), விவசாயி. இவா் கடந்த வியாழக்கிழமை இரவு திம்மாம்பேட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா். வீட்டின் எதிரே நின்றிருந்த போது மா்மநபா்கள் வேலாயுதம் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது வேலாயுதத்தின் இதய பகுதியை நோக்கி பாய்ந்த 2 குண்டுகள் அவரது சட்டைப் பையில் வைத்திருந்த செல்லிடப்பேசி மீது பாய்ந்தன. இதில், செல்லிடப்பேசி சேதமடைந்த நிலையில், வேலாயுதம் மயங்கி கீழே விழுந்தாா். இதையறிந்த உறவினா்கள் வேலாயுதத்தை மீட்டு, வாணியம்பாடி தனியாா் மருத்துவனையில் சோ்க்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மருத்துவா்கள் வேலாயுதத்தின் உடலை ஸ்கேன் செய்து பாா்த்த போது, தாடை மற்றும் மாா்பு பகுதியில் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 2 குண்டுகள் (பால்ரஸ்) இருப்பது கண்டறியப்பட்டது. தொடா்ந்து வேலாயுதம் மேல்சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த பிரகாசம், குள்ளையன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com