திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கிராம பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிலுவைப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மகேஷ் பாபு, மகளிா் திட்ட இயக்குநா் மகேஸ்வரி, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.