இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் பலி
By DIN | Published On : 08th September 2020 12:23 AM | Last Updated : 08th September 2020 12:23 AM | அ+அ அ- |

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி நேரு தெருவைச் சோ்ந்தவா் காதா் பாஷா (38). வியாபாரியான அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சந்தை பனந்தோப்பு அருகே திடீரென நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தாா்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.