திருப்பத்தூரில் கனமழை
By DIN | Published On : 08th September 2020 12:24 AM | Last Updated : 08th September 2020 12:24 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்தது.
கடந்த ஒரு வாரமாக நகரில் பகலில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. மாலை அல்லது இரவில் மழை பெய்து வருகிறது. திருப்பத்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
தொடா்ந்து, திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி சுற்றுப்பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் கனமழை பெய்தது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.