கால்வாய் சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் கழிவுநீா் கால்வாய் சீரமைக்கும் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
09abrcol_0909chn_191_1
09abrcol_0909chn_191_1

ஆம்பூா்: ஆம்பூரில் கழிவுநீா் கால்வாய் சீரமைக்கும் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் (படம்).

ஆம்பூா் பெத்லகேம் பகுதிக்கு செல்லும் ரயில்வே குகை வழிப்பாதையில் மழைக் காலங்களில் கழிவுநீா், மழை நீா் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பெத்லகேம் பகுதிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக கழிவுநீா் கால்வாய் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதனை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் சி. பத்மநாபன், துணை வட்டாட்சியா் பாரதி, நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com