ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியில் ரூ. 1.39 கோடி மதிப்பீட்டில் திங்கள்கிழமை குடிநீா் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
மிட்டாளம் ஊராட்சியில், ரூ. 1.39 கோடி மதிப்பீட்டில் குடிநீா் திட்டப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை செய்து, கட்டுமானப் பணியைத் தொடக்கி வைத்தாா். பொதுமக்கள், திமுக பிரமுகா்கள் உடன் இருந்தனா்.