தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து நாசம்


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 2 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் ஊராட்சி வேடியப்பன் கோயில் வட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி சென்றாயன். இவருக்குச் சொந்தமான 2 குடிசை வீடுகளும் வியாழக்கிழமை காலை திடீரென மின்கசிவு ஏற்பட்டதில் தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், நாட்டறம்பள்ளி தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். எனினும், இரண்டு குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் இருந்த பொருள்கள், துணிகள் முழுவதும் எரிந்து நாசமாயின.

தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com