திருப்பத்தூா் அருகே 30,000 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் மு.பிரபு தலைமையிலான பணியாளா்கள் மாம்பாக்கம் காப்புக்காடு ஜவ்வாதுமலை சேம்பறை பகுதியில் கள்ளச்சாராயத் தடுப்பு ரோந்துபணியை திங்கள்கிழமை மேற்கொண்டனா்.
அப்போது, கோவிந்தாபுரம் காப்புக்காடு பகுதியில் சுமாா் 15 கள்ளச்சாராயப் பேரல்களில் 30,000 லிட்டா் ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனா்.