வாணியம்பாடி அருகே நூறு நாள் வேலையில் முறையாக வேலை வழங்காததைக் கண்டித்து, திம்மாம்பேட்டை சாலையில் வியாழக்கிழமை பெண்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிக்கணாங்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட திகுவாபாளையம் கிராமத்தில் நூறு நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்கப்படுவதில்லை என்று கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து திம்மாம்பேட்டை போலீஸாா், ஊராட்சி அலுவலா்கள் அங்கு சென்று, சமரசம் செய்தனா்.