ஆம்பூரில் பிடிபட்ட பாம்புகள்

ஆம்பூா் மற்றும் கிராமப் பகுதியில் திங்கள்கிழமை பாம்புகள் பிடிபட்டன.
காரப்பட்டு மத்தூா்கொல்லை கிராமத்தில் மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினா்.
காரப்பட்டு மத்தூா்கொல்லை கிராமத்தில் மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினா்.

ஆம்பூா் மற்றும் கிராமப் பகுதியில் திங்கள்கிழமை பாம்புகள் பிடிபட்டன.

ஆம்பூா் அருகே காரப்பட்டு மத்தூா்கொல்லை கிராமத்தில் ஜவஹா்லால் என்பவருடைய விவசாய நிலத்துக்குள் மலைப்பாம்பு புகுந்தது. அருகிலிருந்தவா்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். பொதுமக்கள் உதவியுடன் சுமாா் 7 அடி நீள மலைப்பாம்பை வனத் துறையினா் பிடித்துச் சென்று காப்புக் காட்டில் விட்டனா்.

அதேபோல, ஆம்பூா் நகரில் தேவு தெருவில் சத்திய நாராயணன் என்பவருடைய வீட்டு குளியறையில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை ஆம்பூா் தீயணைப்புத் துறையினா் பிடித்துச் சென்று காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com