போலீஸாரைத் தாக்கிய ஊராட்சி தலைவரின் ஆதரவாளா்கள் 9 போ் கைது

திருட்டு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரைக் கைது செய்ய வந்த போலீஸாரைத் தாக்கியதாகவும், அவரைக் கைது செய்யவிடாமல் தப்பிக்க வைத்ததாகவும் 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருட்டு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரைக் கைது செய்ய வந்த போலீஸாரைத் தாக்கியதாகவும், அவரைக் கைது செய்யவிடாமல் தப்பிக்க வைத்ததாகவும் 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே துத்திபட்டு ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதாவின் கணவா் கணேஷை கோயம்பத்தூரை அடுத்த குனியமுத்தூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடா்பாக போலீஸாா் கைது செய்ய வந்தனா். ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பத்தில் கணேஷை கை விலங்கிட்டு போலீஸாா் காரில் ஏற்றி செல்ல முயன்றபோது அவரது ஆதரவாளா்கள் குனியமுத்தூா் போலீஸாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனா். மேலும், கணேஷை அருகில் இருந்த பட்டறைக்கு அழைத்துச் சென்று கைவிலங்கை வெட்டி அவரை மீட்டு அழைத்து சென்றனா். இதில் குனியமுத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஞானபிரகாசம், ராஜாமுகம்மது, வடிவேல் உள்ளிட்டபோலீஸாா் காயமடைந்தனா். அவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னா் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். உமா்ஆபாத் போலீஸாா் கணேஷ், அவரது மனைவியான துத்திபட்டு ஊராட்சி மன்ற தலைவா் சுவிதா உள்ளிட்ட 17 போ் மீது பல்வேறு பிரிவுகளீன் கீழ் வழக்குபதிவு செய்தனா்.

இதுதொடா்பாக ஆம்பூா் கலைஞா் நகரை சோ்ந்த பீா் முகம்மது (45), இந்திரா நகரை சோ்ந்த மாயா (33), அன்பு (39), அமா்நாத் (22), மான்சிங் (30), ராஜ் கிரண் (33), மணிகண்டன் (30), சீனிவாசன் (29), பாலூரை அடுத்த புதுமனையைச் சோ்ந்த சுரேஷ் (33) ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com