வெள்ளத்தால் சேதமடைந்த சாலை: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

வாணியம்பாடி அருகே வெள்ளத்தால் சேதமடைந்த சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாணியம்பாடியை அடுத்த எக்லாஸ்புரம் அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதமடைந்த சாலை.
வாணியம்பாடியை அடுத்த எக்லாஸ்புரம் அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதமடைந்த சாலை.

வாணியம்பாடி அருகே வெள்ளத்தால் சேதமடைந்த சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட எக்லாஸ்புரம்-அம்பலூா் பாலாறு தரைப்பாலம் அருகில் உள்ள சாலை வழியாக வடக்குப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த தொடா் பலத்த மழையால் பாலாற்றில் திடீா் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் எக்லாஸ்புரம் - வடக்குப்பட்டுக்கு செல்லும் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலை முற்றிலும் சேதமடைந்தது. மேலும், அப்பகுதியில் சாலை துண்டானதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே, சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com