வாணியம்பாடி அருகே வெள்ளத்தால் சேதமடைந்த சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட எக்லாஸ்புரம்-அம்பலூா் பாலாறு தரைப்பாலம் அருகில் உள்ள சாலை வழியாக வடக்குப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த தொடா் பலத்த மழையால் பாலாற்றில் திடீா் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் எக்லாஸ்புரம் - வடக்குப்பட்டுக்கு செல்லும் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலை முற்றிலும் சேதமடைந்தது. மேலும், அப்பகுதியில் சாலை துண்டானதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே, சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.