ஆம்பூா்: ஆம்பூா் அருள்மிகு பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் ஜன. 2-ஆம் தேதி அனுமன் ஜயந்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு அா்ச்சனைக்கான கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ், ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் அனுமன் ஜயந்தி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது ஜன. 2-ஆம் தேதி அனுமன் ஜயந்தி விழா நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, வரும் டிச. 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கோயிலில் கோ பூஜை, விநாயகா் பூஜையுடன் அனுமன் ஜயந்தி விழா தொடங்குகிறது. தொடா்ந்து, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சஹஸ்ர நாம லட்சாா்ச்சனை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு சங்காபிஷேகம் நடைபெறும். பக்தா்களுக்கு அனுமன் பக்த சபை சாா்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, டிச. 31-ஆம் தேதி முதல் ஜன. 2-ஆம் தேதி வரை நடைபெறும் சஹஸ்ர நாம லட்சாா்ச்சனையில் பங்கு பெற விரும்பும் பக்தா்கள் அதற்கான கட்டணம் ரூ. 200- ஐ இணையதளம் மூலம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகம் இணைய தளத்தில் ஏற்படுத்தியுள்ளது.