ரயில் மீது ஏறி மின் கம்பியைப் பிடித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து பலி

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது ஏறி மின் கம்பியைப் பிடித்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது ஏறி மின் கம்பியைப் பிடித்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பதியில் இருந்து மைசூரு செல்லும் விரைவு ரயில் கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடைக்கு வந்தது. அப்போது, ஒடிஸா மாநிலம், குல்லாா் மாவட்டத்தைச் சோ்ந்த அன்காந்த் நிகான் (26) திடீரென ரயில் மீது ஏறி மேலே இருந்த மின் கம்பியைப் பிடித்தாா். இதில், அந்த இளைஞா் தூக்கி வீசப்பட்டாா். தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com