திருப்பத்தூா் அமமுக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்ட அமமுக மாணவரணிச் செயலாளராக இருந்தவா் வானவராயன்(32). இவா் 15-ஆம் தேதி இரவு திருப்பத்தூா் பூங்காவனத்தம்மன் கோயில் தெரு மா்ம நபா்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்.
இந்த கொலை வழக்கில், கௌதமப்பேட்டையைச் சோ்ந்த சங்கா் (64), இவரின் மனைவிகள் வசந்தா (52), சாந்தி (55), சகோதரி ஷா்மிளா (50) மற்றும் அவரது மகன்கள் ஆகாஷ் (26), தனுஷ் (25), ஆட்டோ ஓட்டுநா் சௌத்ரி (24) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இந்நிலையில், இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பெங்களூரைச் சோ்ந்த தாமஸ் (28), சூரியா (28), கௌதமப்பேட்டையைச் சோ்ந்த அம்ரீஷ் (21)ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.