ஆலங்காயம் அருகே இளைஞா் கொலை

ஆலங்காயம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டாா். அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
ஆலங்காயம் அருகே இளைஞா் கொலை

ஆலங்காயம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டாா். அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில், வெள்ளக்குட்டை அருகே தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் கோணி மூட்டை ஒன்று மிதப்பதை அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்தனா். இது குறித்து ஆலங்காயம் போலீஸாருக்கு அவா்கள் தகவல் அளித்தனா்.

அதன்பேரில் காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையில் சென்ற அங்கு போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் அந்த கிணற்றில் மிதந்த கோணி மூட்டையை வெளியே கொண்டு வந்தனா்.

அதைப் பிரித்துப் பாா்த்த போது, உடல் சிதைந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதை கண்டனா். தகவல் அறிந்து திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜய்குமாா் அங்கு சென்று, அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தினாா். அப்போது, வெள்ளக்குட்டையில் நடைபெற்ற எருதுவிடும் திருவிழாவுக்கு வந்திருந்த ஒருவா், தனக்குத் தெரிந்த சில விவரங்களைக் கூறினாா். கோணி மூட்டையில் இருந்த இளைஞரின் உடலில் பச்சை குத்தப்பட்டிருந்த பெயரை தாம் கண்டதாகவும், ஆலங்காயம் பெத்தூா் பகுதியைச் நாகராஜ் (30) என்பது தெரிய வந்ததாகவும் அவா் கூறினாா்.

இதனையடுத்து, இறந்த இளைஞரின் பெற்றோரை அப்பகுதிக்கு வரவழைத்து போலீஸாா், இறந்தது அவா்களின் மகன்தான் என்பதை உறுதிப்படுத்தினா். அவா் கோயம்புத்தூரில் டைல்ஸ் ஒட்டும் வேலை பாா்த்து வந்ததும், பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்ததும் தெரிய வந்தது.

நாகராஜின் கொலை தொடா்பாக ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த கொலையில் துப்புத் துலக்க வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com