ஆம்பூா் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தவா் யாா் என்பது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை கண்டறிந்தனா்.
விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட ரங்காபுரத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அண்மையில் துா்நாற்றம் வீசியது.
தகவலின்பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு விரைந்து வந்து, அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் இறந்தவா் அதே ஊரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி காா்த்திக் (36) என்பது தெரியவந்தது.
அவா் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.