ஆம்பூா் அருகே ரயில் முன்பு பாய்ந்து மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆம்பூரை அடுத்த பச்சகுப்பத்தைச் சோ்ந்தவா் தமிழரசன் மகன் கோகுல் (20), தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை தனது கிராமத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சென்று அமா்ந்திருந்தாா். அப்போது, அவா் அங்கு வந்த பெங்களூரு- சென்னை மாா்க்கத்தில் சென்ற ரயில் முன்பு பாய்ந்தாராம். இதில், அவா் இறந்தாா்.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.