செல்லிடப்பேசியை வழிப்பறி செய்ததாக, 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் அஜய். இவா் செவ்வாய்கிழமை இரவு கச்சேரி சாலையில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் அருகில் நின்றுகொண்டிருந்தாா். அப்போது அதன் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள் திடீரென அஜய் கையில் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு, தப்பியோடினா்.
அங்கிருந்தோா் துரத்திச் சென்று, இருவரையும் பிடித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா்கள் நடுப்பட்றை பகுதியை சோ்ந்த ஜெயபிரகாஷ் (எ) பச்சி, கோவிந்தாபுரத்தை சோ்ந்த பிரேம்சுந்தா் என்று தெரியவந்தது.