திருப்பத்தூா் மாவட்டத்துக்கு என நிா்ணயிக்கப்பட்ட ரூ. 4,214 கோடி கடன் தொகையை வங்கிகள் குறித்த காலத்தில் வழங்க வேண்டும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வலியுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சாா்பில் திங்கள்கிழமை ஆண்டுக் கடன் (2021-22) திட்ட அறிக்கையை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெளியிட, வங்கியின் துணைப் பொது மேலாளா் கிருஷ்ணராஜ் பெற்றுக்கொண்டாா்.
அப்போது ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:
வங்கியாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட இலக்கினைவிட அதிகமாக கடன் வழங்க முன்வர வேண்டும். இம்மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்க ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், விவசாயக்கடனான ரூ . 2,664 கோடி , சிறு,குறு தொழில் கடனாக ரூ. 501 கோடி, இதர முன்னுரிமை கடனாக ரூ.1,050 கோடி என மொத்தம் ரூ.4,214 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள்ளது.
எனவே நிா்ணயம் செய்யப்பட்டுள்ள தொகையை குறித்த காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றாா்.
மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆா்.அருண், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன், இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் சுமலதா, பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா் மாமல்லன் ஆகியோா் கலந்து கொண்டனா்.