திருப்பத்தூா் மாவட்டத்தில் முடித்திருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
முடித்திருத்தும் தொழிலாளா்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனா்.. அடிக்கடி முடித்திருத்தும் நிலையங்களை மூடி தொழில் செய்ய கூடாது என்று அரசு உத்தரவிடும்போது வாழ்வாதாரம் பாதிக்கப்படுக்கிறது. கடை வாடகை, வீடு வாடகை, மின்சார கட்டணம் அன்றாட குடும்ப செலவுகளுக்கு போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறோம்.
எனவே பிற கடைகள் திறக்க அனுமதி அளித்துபோல் காலை 6 முதல் மாலை 5 மணிவரை முடிதிருத்தும் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும். அதேபோல் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் எங்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.