ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராய ஊறலை வனத் துறையினா் புதன்கிழமை அழித்தனா்.
ஆம்பூா் வனத்துறையினா் வனச்சரக அலுவலா் மூா்த்தி தலைமையில் ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமம் காரப்பட்டு காப்புக் காடு பகுதியில் திடீா் சோதனை நடத்தினா். துரையேறிவழிச் சரக பகுதியில் மறைவிடத்தில் கள்ளச் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சுமாா் 500 லிட்டா் ஊறல், சாராயம், கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் வனத்துறையினா் அழித்தனா்.