ஆம்பூரில் விரைவில் கரோனா நோய் தொற்றுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கப்பட உள்ளது. அதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆம்பூரில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக சித்தா சிறப்பு சிகிச்சை மையம் துவங்க திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே இயங்கி வரும் ஸ்ரீ வித்ய விஹாா் கல்விக் குழும வளாகத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பது குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், நகரக் காவல் நிலைய ஆய்வாளா் திருமால் ஆகியோா் உடனிருந்தனா்.