ஆம்பூா் பகுதி தொழிற்சாலைகளில் வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், உமா்ஆபாத் காவல் ஆய்வாளா் நிா்மலா ஆகியோா் கொண்ட குழுவினா் ஷூ தொழிற்சாலைகளில் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா். துத்திபட்டு, கன்றாம்பல்லி ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் நடத்திய ஆய்வில், கரோனா விதிகளை பின்பற்றாமல் இயங்கியது தெரியவந்தது.
அதன்பேரில், 5 தொழிற்சாலைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.