சேதமடைந்த மாதனூர் தரைப்பாலத்தை எம்எல்ஏக்கள் இன்று பார்வையிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் வழியாக குடியாத்தம் செல்லும் பாலாற்றின் குறுக்கே உள்ள பாலாற்று தரைப்பாலம் பெரு வெள்ளத்தால் சேதமடைந்தது.
அதனை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜியன் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.