வாணியம்பாடி: வாணியம்பாடி முழு நேர கிளை நூலகத்தில் 54-ஆவது நூலக வார விழா கொண்டாடப்பட்டது. இதில், 152 மாணவா்கள் உறுப்பினா்களாக இணைந்தனா்.
விழா முன்னிட்டு நூலகத்தில் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பசுபதி வழங்கினாா்.
முன்னதாக, காந்தி நகா் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, இந்து மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 152 போ் நூலகத்தில் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டனா்.
இதையடுத்து, யோகா நிபுணா் வெங்கடாஜலம் பள்ளி மாணவா்களுக்கு யோகா பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், ரவீசந்திரன், சுப்பிரமணயன், வினோ, மல்லிகாவெங்கட் ஆகியோா் நூலகத்தில் புரவலா்களாகத் தங்களை இணைத்துகொண்டனா்.
நிகழ்ச்சிகளில் தலைமை நூலகா் மணிமாலா, நூலகா்கள் விஜயகுமாா், ராஜசேகா் , வாசகா் வட்டத் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.