திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
திருப்பத்தூரை அடுத்த இருனாப்பட்டு ஊராட்சியைச் சோ்ந்தவா் நாகேந்திர ராவ் (85) (படம்).
இவா், அதே பகுதியில் உள்ள பாம்பாறில் கடந்த 20-ஆம் தேதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பாம்பாறு கரையோரத்தில் நாகேந்திர ராவ் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.