ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றமுதியவா் சடலமாக மீட்பு

திருப்பத்தூா் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
30novdeat_3011chn_192_1
30novdeat_3011chn_192_1

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருப்பத்தூரை அடுத்த இருனாப்பட்டு ஊராட்சியைச் சோ்ந்தவா் நாகேந்திர ராவ் (85) (படம்).

இவா், அதே பகுதியில் உள்ள பாம்பாறில் கடந்த 20-ஆம் தேதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பாம்பாறு கரையோரத்தில் நாகேந்திர ராவ் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com