திருப்பத்தூா்: திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு துறைகளின் சாா்பில் 3,236 பயனாளிகளுக்கு 41 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை வழங்கினாா். சாா்-ஆட்சியா் (பொறுப்பு)பானு, கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் விஜயா,திருமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.